பொருளடக்கத்திற்கு தாவுக
வாகை செய்திகள்

வாகை செய்திகள்

    • எங்களைப் பற்றி
  • முஸ்லிம் இளைஞர் கொலை – காவலர்கள் விடுதலை!

    முஸ்லிம் இளைஞர் கொலை – காவலர்கள் விடுதலை!

    சாத்தான்குளம் காவல் சித்திரவதை படுகொலை தீர்ப்பில் நாமெல்லாம் ஆழ்ந்திருந்த நேரத்தில். ஒரு முஸ்லிம் இளைஞரை அடித்து படுகொலை செய்து தீயிட்டு கொளுத்திய வழக்கில் 13 காவலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் மசூது (வயது46), கடந்த 2006-ம் ஆண்டு ஆரல்வாய்மொழி போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்படுகிறார். காவல்துறையின் விசாரணையின்போது அவர் காவல் படுகொலை செய்யப்படுகிறார், கொல்லப்பட்ட மசூதின் சடலத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உடலை தீயிட்டு கொளுத்தி சாட்சியத்தை அழித்து விடுகின்றனர் காவலர்கள்.…

    NewsDesk

    8th மே 2026
    சமூகம்
    அநீதி, முஸ்லிம்
  • நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட்!

    நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட்!

    தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்திட வெளியிலிருந்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு தருவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு ஒருமனதாக தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் 08.05.2026 அன்று மாலை 3.00 மணிக்கு சென்னை சூளைமேடு, அமீர்ஜான் தெருவில் உள்ள ஏஐபிஇயூ அலுவலகம் “தாரக் இல்ல”த்தில் தோழர் கே.சந்தானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட…

    NewsDesk

    8th மே 2026
    தமிழ்நாடு
    தமிழ்நாடு, விஜய்
  • நேபாளத்தில் பாசிசமயமாகும் ஜென் ஜி இயக்க ஆட்சி!

    நேபாளத்தில் பாசிசமயமாகும் ஜென் ஜி இயக்க ஆட்சி!

    நேபாளத்தில் மைய நீரோட்ட கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு மாவோயிஸ்ட் கட்சி மற்றும் ஏனைய மைய நீரோட்டக் கட்சிகளுடைய ஆட்சிகளின் மீதான அதிருப்தியால் விளைந்த ஜென் ஜி(Gen z) எழுச்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த தனது வர்க்க புத்தியை காட்டும் விதமாக கல்வி நிறுவன கட்சிசார் மாணவர் பேரவைகளை மட்டுமன்றி அரசு அலுவலர் இடையேயான கட்சிசார் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதையும் தடை செய்வதாக ஜென் ஜி இயக்க ஆட்சி அறிவித்துள்ளது. நேபாளத்தில் ஜனநாயகம் தோன்றுவதற்கோ நிலவும் ஜனநாயகத்தையாவது காப்பாற்றுவதற்கு பெரிதும்…

    NewsDesk

    1st ஏப்ரல் 2026
    சர்வதேசம்
    நேபாளம், மாவோயிசம
  • சட்டமன்றத் தேர்தலில் எஸ்.யு.சி.ஐ பங்கேற்பு!

    சட்டமன்றத் தேர்தலில் எஸ்.யு.சி.ஐ பங்கேற்பு!

    எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் ஆ ரெங்கசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,”17வது சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்றமுறை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசாங்கம் மறுபடியும் ஆட்சியில் தொடர முயற்சிக்கிறது. அதேசமயம், ஏகபோக கார்போரேட் ஆதரவு மதவெறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ஊழலுக்குப் பெயர்போன அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர யத்தனிக்கிறது. மக்களுக்கு இவர்கள் மேலுள்ள வெறுப்பை அறுவடை செய்ய தமிழினவாதம் பேசும் நா.த.க வும் திரை பிம்பத்தை முதலீடாகக்…

    NewsDesk

    18th மார்ச் 2026
    அரசியல்
    சட்டமன்றம், தேர்தல்
  • அறிஞர் அய்ஜாஸ் அஹமது போல ஒருவர் ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை? 

    அறிஞர் அய்ஜாஸ் அஹமது போல ஒருவர் ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை? 

    புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமது 2022 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது சிந்தனைகள் குறித்து தமிழ்ச் சூழலில் எந்தவொரு விவாதமும் எழவில்லை. கோட்பாட்டு ரீதியில் மார்க்சியத்தை விளக்கியதோடு, சமகாலப் பிரச்சனைகளையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அவர் பல கட்டுரைகளையும் நூல்களையும்  எழுதிவந்தார்.  குறிப்பாக எட்வர்ட் செய்தின் புகழ்பெற்ற ‘ஓரியண்டலிசம்’ நூல் குறித்து அவர் எழுதிய விமர்சனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பொருத்தப்பட்டை விளக்கி…

    NewsDesk

    17th மார்ச் 2026
    அரசியல்
    அறிஞர், அஹமது
  • அமெரிக்காவின் சதிக்கு துணை போகின்றனவா குர்து அமைப்புகள்?

    அமெரிக்காவின் சதிக்கு துணை போகின்றனவா குர்து அமைப்புகள்?

    ஈரானிய குர்திஸ்தானின் அரசியல் படைகளின் கூட்டணி(CPFIK) என்கிற ஒரு இராணுவ கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இது பல்வேறு குர்திஸ்தான் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக உருவாக்கப்பட்டுள்ளது. குர்திஸ்தான் ஜனநாயக கட்சி-ஈரான்(KDPI),குர்திஸ்தான் சுதந்திரக் கட்சி(PAK) குர்திஸ்தான் சுதந்திர வாழ்வுக்கான கட்சி(PJAK), ஈரானிய குர்திஸ்தானின் போராட்ட அமைப்பு உள்ளிட்ட  ஆறு அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஈரானில் கிளர்ச்சியை தொடங்குவதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் நிதி மற்றும் ஆயுத உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது. துருக்கி, சிரியா, ஈரான், ஈராக் என…

    NewsDesk

    6th மார்ச் 2026
    சர்வதேசம்
    ஈரான், குர்திஸ்தான்
  • குமரி திருவள்ளுவர் சிலை : ஆர்.எசு.எசு. கட்டுப்பாட்டிலா?

    குமரி திருவள்ளுவர் சிலை : ஆர்.எசு.எசு. கட்டுப்பாட்டிலா?

    தமிழ்நாட்டின் தலைநகரில் திருவள்ளுவர் கோட்டமும், தென்குமரி முனையில் வானுயர்ந்த திருவள்ளுவர் படிமமும் அமைந்து பெருமை சேர்க்கின்றன. இப்பணிக்காக வரலாற்றில் கலைஞர் கருணாநிதி இடம் பெறுவார் என்பது திண்ணம். தென்குமரியைத் தன்வயமாக்கத் திட்டமிட்ட ஆர்.எசு.எசு. தம் மூத்த தொண்டர் ஏக்நாத் இரானடேவை அப்பணிக்காக அனுப்பியது. விவேகானந்தர் குமரி முனைப் பாறையில் தவம் இருந்த பின்னரே சிகாகோ மாநாட்டிற்குச் சென்றார் என்ற கட்டுக் கதையோடு தமிழகம் வந்த ஏக்நாத் இரானடே அந்தப் பாறையில் விவேகானந்தருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று…

    NewsDesk

    4th மார்ச் 2026
    அரசியல்
    ஆர்.எஸ்.எஸ், நாக்பூர்
  • இருண்ட நிழலை வீசும் எப்ஸ்டீன் ஆவணங்கள்-எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு!

    இருண்ட நிழலை வீசும் எப்ஸ்டீன் ஆவணங்கள்-எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு!

    எப்ஸ்டீன் ஆவணங்கள் மோடியின் தலைமைத்துவத்தின் மீதும் இந்தியாவின் இராஜதந்திர நாணயத்தின் மீதும் இருண்ட நிழலை வீசுகின்றன! – SDPI கட்சி குற்றச்சாட்டு! அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து வெளிவந்த கவலைக்கிடமான தகவல்கள், மோடியின் தலைமைத்துவத்தின் மீதும் இந்தியாவின் இராஜதந்திர நாணயத்தின் மீதும் இருண்ட நிழலை வீசுகின்றன என எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அஷ்ரஃப் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த ஆவணங்களில் உள்ள ஆழமான குற்றச்சாட்டுகள், இந்தியாவின் உயர்ந்த அரசியல்…

    NewsDesk

    3rd பிப்ரவரி 2026
    சர்வதேசம்
    எப்ஸ்டீன், மோடி
  • எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?

    எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?

    “எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein Files) என்றால் என்ன என்று பலர் என்னிடம் உள்பெட்டியிலும் வாட்சப்பிலும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள், அவர்களுக்காக இந்த சுருக்கமான பதிவு.. அமெரிக்க நிதி முதலீட்டாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் விசாரணை ஆவணங்களின் தொகுப்பு சமீபத்தில் வெளிவானது. இதில் நீதிமன்ற ஆவணங்கள், சாட்சியங்கள், விமானப் பயணப் பதிவுகள், மின்னஞ்சல்கள் மற்றும் பல வழக்கு ஆவணங்கள் அடங்கும். இவை ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ஒரு அரசு அறிக்கையாக அல்லாது, பல ஆண்டுகளாக நீதிமன்ற…

    NewsDesk

    2nd பிப்ரவரி 2026
    சர்வதேசம்
    அமெரிக்கா, எப்ஸ்டீன்
  • திருப்பூர் மீண்டெழத் துணைநிற்போம்!

    திருப்பூர் மீண்டெழத் துணைநிற்போம்!

    அமெரிக்க டிரம்ப் அரசின் 50% வரிவிதிப்பால் திருப்பூர் பின்னலாடைத் தொழில்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளும் தீர்வுகளும் என்ற நோக்கில் இன்று நண்பகல் 12 மணியளவில் மக்கள் இயக்கங்கள் அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டறிக்கை சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர்.கனியமுதன் , மக்கள் அதிகாரம் இணைப் பொதுச்செயலாளர் தெய்வீகன் , புஇமு தோழர் மகிழ்நன் , மனித செல்வி…

    NewsDesk

    30th ஜனவரி 2026
    தொழில்
    திருப்பூர், பின்னலாடை
1 2 3
அடுத்த பக்கம்→

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

  • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • வாகை செய்திகள்
    • Already have a WordPress.com account? Log in now.
    • வாகை செய்திகள்
    • சந்தாசெய் உறுதி செய்யப்பட்ட சந்தா
    • பதிவு செய்க
    • உள்நுளை
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar